Captain Vijayakanth NEXT CM.

Captain Vijayakanth NEXT CM. NEED CHANGES IN TAMILNADU POLITICS ............. SUPPORT CAPTAIN .......
(1)

எங்கள் கழகத்தை விமர்சித்த காசுக்கு மாரடிக்கிற இந்த நாய்களுக்கு இந்த மாலை மட்டும் போதாது.வீடு கூட்டுகின்ற விளக்கமாறு சேர்...
12/01/2026

எங்கள் கழகத்தை விமர்சித்த காசுக்கு மாரடிக்கிற இந்த நாய்களுக்கு இந்த மாலை மட்டும் போதாது.
வீடு கூட்டுகின்ற விளக்கமாறு சேர்த்து போட வேண்டும்
ஏண்டா உங்களுக்கெல்லாம் வேலையே இல்லையா
நீங்க வேற தொழில் பார்க்கலாமே
தேமுதிக பற்றி எவன் தவறாக பேசினாலும் அவனுக்கு முகநூல் இருக்கக்கூடிய உறவுகள் அதற்கு பாடம் புகட்டுங்கள்

வாழும் காலத்தில் பிறர் வாழ்வில் ஒளியேற்றிய உன்னதமான மனிதன் கேப்டன் விஜயகாந்த் சார் அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்த...
28/12/2025

வாழும் காலத்தில் பிறர் வாழ்வில் ஒளியேற்றிய உன்னதமான மனிதன் கேப்டன் விஜயகாந்த் சார் அவர் வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் என்கின்ற பெருமை போதும்

கேப்டன்’ விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று
28/12/2025

கேப்டன்’ விஜயகாந்தின் 2-ம் ஆண்டு நினைவு நாள் இன்று

14/11/2025

நமது நாட்டின் தலைநகர் புதுடில்லியில் செங்கோட்டைப் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகி
மரணமடைந்த நம் சகோதர சகோதரிகளுக்கு ஆழ்ந்த இரங்கல் உரித்தாகுக.

இந்த பயங்கரவாதக் கொடுஞ்செயலைப் புரிந்தவர்களில் முக்கியமானவர்கள் "மருத்துவர்கள்" என்று அறிந்த போது
அதிகமான அதிர்ச்சியும் வேதனையையும் அடைந்தேன்.

உயிர்களைக் காக்கும் உன்னதப் பொறுப்பும் கடமையும் வழங்கப்பட்ட
தொழில் - மருத்துவத் துறை.

சொல்லால் செயலால்
தான் வழங்கும் சிகிச்சையால் கூட
பிறருக்குத் துன்பம் இழைக்கக் கூடாது என்பதே ஹிப்போகிராடஸ் உறுதிப் பிரமாணத்தில் உள்ள "ப்ரைமம் நான்நொசிர்"( PRIMUM NON NOCERE - FIRST DO NO HARM) எனும் தத்துவம்

ஆயினும், மூளைச் சலவை மூலம்
தவறான கருத்துகள் புகுத்தப்பட்டு
மனித உயிர்களைக் கொல்வது சரி என்று சிந்தனைப் பிறழ்வு ஏற்பட்டு
நன்கு படித்து பல உயிர்களைக் காப்பாற்ற வேண்டிய இடத்தில் இருப்பவர்கள்
வெடிகுண்டுகளைச் சேகரித்து வைத்து
பல இடங்களில் பலரையும் கொல்ல சதி செய்தது உண்மையில் "மருத்துவராக" வெட்கித் தலைகுனிய வைத்தது.
இன்னும் கூட என்னால் அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை.

இந்த சதியில் ஈடுபட்டு இன்னும் பல உயிர்களைக் காவு வாங்க அவர்கள் திட்டிய திட்டமானது வெளிக்கொணரப்பட்டது
எம்பிபிஎஸ் பயின்று டாக்டர் பட்டம் பெற்ற
ஸ்ரீநகர் போலீஸ் அதிகாரியான டாக்டர். ஜி.வீ. சந்தீப் சக்கரவர்த்தி என்பதை அறிந்த போது மனம் நிம்மதி கொண்டது.

அவரது துரிதமான மருத்துவருக்கே உரிய தோண்டித் துருவும் புத்தி இருந்தமையால்
மிகப்பெரிய நாசகார வேலை மற்றும் அதனால் ஏற்பட இருந்த பெரிய பாதிப்புகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளன. அவருக்கும் அவரது மதிக்கூர்மைக்கும் துரிதமான செயல்பாட்டிற்கும் நாம் அனைவருமே கடமைப்பட்டவர்கள்.

தவறான பாதையில் மூளைச் சலவை செய்யப்படுவதற்கு கல்வி என்பது தடையாக இருந்தாலும் வெறும் ஏட்டுக் கல்வி கற்பது ஒன்று மட்டுமே போதாது என்று இந்த நிகழ்வு மூலம் புரிகிறது.

நாம் கற்கும் கல்வி நம்மை சிந்திக்கத் தூண்ட வேண்டும்.
மதத்தின் பெயரால்
இன்னும் பல விஷயங்களின் பெயரால்
மூளைச் சலவை செய்யப்படும் போது,
அதை எதிர்த்துக் கேள்வி கேட்டு
நமது சுய அறிவின்பால் சிந்தித்து உண்மையைக் கண்டுணர வேண்டும்.

ஒரு கோணத்தில் இருந்து மட்டும் ஒரு பிரச்சனையை நோக்காமல்
பிரச்சனைக்கு பல கோணங்களில் தீர்வு காண முற்பட வேண்டும்.
அமைதி வழியில் அற வழியில் சட்ட வழிமுறைப்படி மட்டுமே செயல்பட வேண்டும் என்பதெல்லாம் கல்வியோடு சேர்த்து சுயமாக சிந்தித்தலின் மூலமும் வெளிப்பட வேண்டியத என்பதும் தெரிகிறது.

சக மனிதனைக் கொல்வது தவறு
அதிலும் பயங்கரவாத செயல்கள் செய்து
ஏதுமறியா அப்பாவிகளைக் கொல்ல
எந்த சமயமும் சொல்லவில்லை.

ஆனாலும் கொடுஞ்செயல் புரியும்
மனப்பிறழ்வு கொண்ட பயங்கரவாதிகள்,
தங்களுக்கு உகந்தவாறு சமயத்தை வளைத்துக் கொள்கின்றனர்.
தவறான கற்பிதங்களைத் தாங்களாகவே புகுத்தி அதை மூளைச் சலவை செய்து நம்ப வைக்கப் முற்படுகின்றனர்.

இவர்களின் இந்த சிலந்தி வலையில்
மருத்துவர்களும் அகப்பட்டு பயங்கரவாதிகள் ஆனது தான் இன்னும் அதிர்ச்சியாக இருக்கிறது.

இஸ்லாம் மார்க்கத்தில் சக மனிதனை மனிதனாக மதிக்க வேண்டும்.
ஓருயிரைக் கொன்றவன்
உலகத்தையே கொன்றதற்கு ஒப்பாவான்
ஓருயிரைக் காப்பாற்றியவன்
உலகத்தையே காத்ததற்கு ஒப்பாவான்
என்ற தத்துவங்கள் எடுத்தியம்பப்படுகின்றன.

ஒரு மனிதனுக்கு செய்த தீங்கு என்பது இறைவனாலும் மன்னிக்கப்படாது.
மனிதர்களுக்குள் செய்யப்பட்ட உடன்படிக்கையை மீறியவனுக்கு சொர்க்கம் கிடையாது.

அவரவர் வழி அவரவருக்கு
அவரவர் நம்பிக்கை அவரவருக்கு என்ற தத்துவங்கள் கொண்ட மார்க்கம்.

முகமது நபி அவர்கள் சமய நல்லிணக்கத்தை பேணுபவர்களாகவே இறுதிக்காலம் வரை இருந்தனர்
இறக்கும் தருவாயில் தனது கவச உடையை ஒரு யூதரிடம் அடமானமாக வைத்திருந்தனர்

உங்கள் வீட்டில் குழம்பு வைத்தால் அதில் தண்ணீர் ஊற்றியாவது அண்டை வீட்டாருக்கும் கொடுத்து சாப்பிடுங்கள் என்றார்
அண்டை வீட்டார் இன்ன மதம் என்று பார்த்துக் கொடுங்கள் என்று எங்குமே கூறவில்லை.

இப்படியாக சமய நல்லிணக்கத்தை பேணும் இஸ்லாம் மார்க்கத்தில் இருந்து கொண்டு இஸ்லாமிய பெயர்களை வைத்துக் கொண்டு தவறான கர்ப்பிதங்கள் மற்றும் மூளைச் சலவைக்கு உள்ளாகி இவர்கள் செய்த கொடுங்காரியங்களுக்கு
இவர்களே பொறுப்புதாரிகள்.

இவர்கள் செய்த செயலை,
ஒவ்வொரு இஸ்லாமியரும் வெறுக்கவே செய்வார்கள். எனவே,
இங்கு அண்ணனாக தம்பியாக மாமனாக மச்சானாக வாழ்ந்து வரும் எங்களைப் பார்த்து "என்ன உங்க ஆளுங்க இப்டி பண்ணிட்டாங்க?" என்று தயவு செய்து கேட்டு எங்களைக் குத்தாதீர்கள்.

சகோதர சகோதரிகள் அனைவரிடம் ஒன்று கூறுகிறேன்.

இந்த தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகள் - எங்களைச் சேர்ந்தவர்கள் இல்லை.
முஸ்லீம் பெயர் தாங்கிகள் மட்டுமே.
இவர்களது நோக்கம் - அமைதியை சீரழிப்பது. மக்களைக் கொல்வது.

இஸ்லாமின் நோக்கம் அதுவன்று.

ஒரே பக்கமாக மூளைச் சலவை செய்யப்பட்ட அவர்கள் மனித குல விரோதிகள்.
இந்தியாவின் விரோதிகள்.
யாரெல்லாம் மனித குலத்திற்கு மற்றும் இந்தியாவிற்கு விரோதிகளோ அவர்கள் எங்களுக்கும் விரோதிகளே.

அதே போன்று "என்ன டாக்டரா இருந்துட்டு இப்டி பண்ணிட்டாங்க?" என்றும் கேட்காதீர்கள்.
மனப்பிறழ்வு கொண்ட மிருகங்கள் வரலாறு நெடுகிலும் இருந்துள்ளன. அவைகளுக்கு கல்வி, குடும்பம் என்பதெல்லாம் தடையாக இருந்ததில்லை.
எனவே, அவர்களை மருத்துவர்கள் என்றும் அழைக்காதீர்கள்.

இந்தத் தாக்குதலில்
இறந்த அப்பாவிகள் அனைவருமே இந்தியர்கள்
அவர்கள் இனத்தால் மொழியால் மதத்தால் வேறுபட்டவர்களாயினும் அனைவரும் பிறப்பால் ஒன்றே. நமது தாய்நாடு இந்தியா. இதன் நலனுக்கு குந்தகம் விளைவிக்கும் யாராயினும் அவர்கள் நமக்கு எதிரிகளே ஆவர்.

நாட்டின் பாதுகாப்புக்கும் அப்பாவி உயிர்களையும் எடுக்கத் துணிந்த
இவர்கள் அனைவரும் நாசமாகட்டும்.
நமது தேசத்திற்கு எதிராக சதி செய்த இவர்கள் மீது இறைவனின் சாபம் உண்டாகட்டும்.

நாட்டின் இறையாண்மை
நாட்டின் ஒற்றுமை மற்றும் பாதுகாப்பு
ஆகியவற்றுக்கு குந்தகம் விளைவிக்க எண்ணம் கொண்டு பாதக செயல்களைச் செய்யும் எவராயினும் அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும். அது மற்றவர்களுக்கு படிப்பினையாக இருக்க வேண்டும்.

இனிவரும் நாட்களில் இது போன்ற துயரங்கள் நிகழாவண்ணம் இன்னும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு
நாம் அனைவரும் அமைதியாக ஒற்றுமையாக நம் தேசத்தில் இப்போது போல எப்போதும் வாழ்ந்திட வேண்டும்.

பிரிவினைக் கருத்துகள் அது எங்கிருந்து எவரிடம் இருந்து வந்தாலும் அதை வேரறுப்போம்.
ஒற்றுமை எனும் கயிரை இறுகப்பற்றிக் கொள்வோம்.

இந்த சதிகாரக் கூட்டத்தால் நிகழ இருந்த மிகப்பெரும் பேரிழப்புகளைத் தவிர்க்க
சிறப்பான முனைப்புடன் செயல்பட்ட
ஜம்மு காஷ்மீர், ஹரியாணா, உத்தர பிரதேசம் , புது டில்லி காவல் துறையினருக்கு
குறிப்பாக எஸ்.எஸ். பி டாக்டர். ஜி.வி. சந்தீப் சக்கரவர்த்தி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுகளும் உரித்தாகுக.

ஜெய் ஹிந்த்...

வாழ்க நம் ஒற்றுமை
வளர்க நம் இந்திய தேசம்.

Dr.அ.ப.ஃபரூக் அப்துல்லா
பொது நல மருத்துவர்
சிவகங்கை

28/09/2025

RIP 😭😔😭😔😭 ......

26/09/2025

"துளசி கூட வாசம் மாறினாலும் மாறும், இந்த தவசி வார்த்தை மாறமாட்டான்."
​தவசி (Thavasi) Captain Vijayakanth NEXT CM.

25/09/2025

கேப்டன் விஜயகாந்த் - ஒரு சகாப்தம்
​விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயரைக் கொண்ட விஜயகாந்த், தமிழ் திரையுலகிலும் அரசியலிலும் தனித்துவமான முத்திரையைப் பதித்த ஒரு மாபெரும் ஆளுமை. அவர் ரசிகர்களால் அன்புடன் “கேப்டன்” என்று அழைக்கப்பட்டார், இது 1991ஆம் ஆண்டு வெளிவந்த ‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படத்தின் மூலம் அவருக்கு கிடைத்த பட்டப்பெயர்.
​விஜயகாந்த், 1979ஆம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். தொடக்கத்தில் பல தோல்விகளைச் சந்தித்தாலும், தனது கடின உழைப்பு மற்றும் தனித்துவமான உடல்மொழி மூலம் ஆக்‌ஷன் ஹீரோவாக உயர்ந்தார். அவர் நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் சமூக நீதியைப் பற்றியும், ஏழை எளிய மக்களின் வாழ்க்கையைப் பற்றியும் பேசின. ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘ஊமை விழிகள்’, ‘சின்ன கவுண்டர்’, ‘சேதுபதி ஐ.பி.எஸ்’ போன்ற படங்கள் அவரை மக்கள் மனதில் நிலைநிறுத்தின. விஜயகாந்த் அவர்கள் சுமார் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
​சினிமாவில் வெற்றிகளைக் குவித்த பிறகு, விஜயகாந்த் 2005ஆம் ஆண்டு தே.மு.தி.க (தேசிய முற்போக்கு திராவிட கழகம்) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கினார். குறுகிய காலத்திலேயே அவர் தமிழக அரசியலில் ஒரு முக்கிய சக்தியாக உருவெடுத்தார். 2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தார். அரசியல்வாதியாக அவர் துணிச்சலான பேச்சுக்காகவும், மக்களுக்காகப் போராடும் குணத்துக்காகவும் அறியப்பட்டார்.
​சினிமாவிலும் சரி, அரசியலிலும் சரி, விஜயகாந்த் தன் ரசிகர்களை எப்போதும் ஒரு குடும்ப உறுப்பினராகவே கருதினார். அவரது எளிமை, நேர்மை மற்றும் உதவிகள் அவருக்கு பல லட்சக்கணக்கான ரசிகர்களைப் பெற்றுத் தந்தது. அவரது மறைவு தமிழக மக்களுக்கு ஒரு பெரிய இழப்பு. கேப்டன் விஜயகாந்த் ஒரு கலைஞராகவும், தலைவராகவும் மக்களின் மனதில் என்றும் வாழ்வார்.

இந்திய திருநாட்டின் சிறந்த குடிமகனுக்கான விருது பெற்ற ஒரே தலைவர் கேப்டன் மட்டும் தான் 👍👍👍👍👍   Captain Vijayakanth NEXT C...
28/08/2025

இந்திய திருநாட்டின் சிறந்த குடிமகனுக்கான விருது பெற்ற ஒரே தலைவர் கேப்டன் மட்டும் தான் 👍👍👍👍👍 Captain Vijayakanth NEXT CM.

25/08/2025

கேப்டன் அவர்களுக்கு மரியாதை செலுத்திய அனைத்து உள்ளங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்

Address

Madurai

Telephone

8610127351

Website

Alerts

Be the first to know and let us send you an email when Captain Vijayakanth NEXT CM. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category