30/11/2023
#வீராணம்_ஏரியை_உலக_பாரம்பரிய_சின்னமாக_அறிவிப்பு
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் பகுதியில் கிட்டத்தட்ட கி.பி 907-955ஆம் ஆண்டு வரை சோழர்கால ஆட்சியில் பராந்தக சோழன் புதல்வன்
ஆதித்த சோழன் என்பவரால் போர் புரியும் படைவீரர்களைக் கொண்டு வெட்டப்பட்ட மிகப்பெரிய ஏரிகளில் ஒன்று வீரநாராயண பெருமாள் ஏரி
இது காலப்போக்கில் வீராணம் ஏரி என்று அழைக்கப்பட்டு வருகிறது இதன் மொத்த கொள்ளளவு 47.50 அடி ஆகும் சுமார் 25 கிலோமீட்டர் நீளமும் 7 கிலோமீட்டர் அகலமும் கொண்ட இந்த ஏரி தற்போது வரை கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோயில், லால்பேட்டை சுற்று வட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு மிக முக்கியத்துவம் வாய்ந்த பாசன ஏரியாக விளங்குகிறது.
இந்த ஏரி தற்போது வரை மக்கள் பயன்பாட்டிற்கு ஏதுவான வகையில் அமைந்துள்ளதால் இந்த ஏரியை உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ளது இதனைப் இப்பகுதி மக்களுக்கு அர்பனிப்பு செய்யும் வகையில் பொதுப்பணி துறையின் சார்பில் இன்று கந்தகுமாரன் ஊராட்சியில் பள்ளி மாணவர்களை கொண்டு சிறிய நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் ஏரியின் வரலாற்றுப் பின்புலத்தை கண்டு வியப்புற்றார் மாவட்ட ஆட்சியர் இதைசுற்றுலா தளமாக மாற்றவும் சம்மதம் தெரிவித்தார்.
பிறகு மாணவர் மத்தியில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் கல்வி ஒன்றே முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் நன்கு படித்து அரசு முக்கியத்துவம் வாய்ந்த உயர் பதவிகளை அடையவேண்டும் என்பதே உங்கள் இலக்காக இருக்க வேண்டும் என மாணவர்களை கேட்டுக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் சார் ஆட்சியர்
சுவேதாசுமன், வட்டாட்சியர் தமிழ்ச்செல்வன், வட்டார வளர்ச்சி அலுவலர் சுகுமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் காந்தரூபன்,
உதவி செயற்பொறியாளர் ஞானசேகரன், சிவராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்
காட்டுமன்னார்குடி நண்பர்கள்
Cuddalore District News - Cdn
Chidambaram Times