World Tamil 360

  • Home
  • World Tamil 360

World Tamil 360 Retiring From Cricket Is Possible. But
Retiring From Our Heart Is Impossible!! Your Will Never Retire From Our Hearts!!!!!

16/04/2015
16/04/2015
24th feb, 2010- God scores a double ton.24th feb, 2015- Godzilla scores a double ton.
24/02/2015

24th feb, 2010- God scores a double ton.

24th feb, 2015- Godzilla scores a double ton.

20/12/2014
123 players retained, 5 traded across teams for Pepsi IPL 2015 Here are the details of the retained and released players...
16/12/2014

123 players retained, 5 traded across teams for Pepsi IPL 2015

Here are the details of the retained and released players for 2015 season:

CSK

(Retained Players): MS Dhoni, Ashish Nehra, Baba Aparajith, Brendon McCullum, Dwayne Bravo, Dwayne Smith, Faf du Plessis, Ishwar Chandra Pandey, Matt Henry, Mithun Manhas, Mohit Sharma, Pawan Negi, R Ashwin, Ravindra Jadeja, Samuel Badree, Suresh Raina, Ronit More.

CSK (Released Players): Ben Hilfenhaus, John Hastings, Vijay Shankar, David Hussey.

DD

(Retained Players): Jean-Paul Duminy, Kedar Jadhav, Manoj Tiwary, Mohammad Shami, Nathan Coulter-Nile, Quinton De K**k, Saurabh Tiwary, Shahbaz Nadeem, Mayank Agarwal, Imran Tahir, Jayant Yadav.

DD (Released Players): Dinesh Karthik, HS Sharath, James Neesham, Jaydev Unadkat, Kevin Pietersen, Laxmi Ratan Shukla, Milind Kumar, Murali Vijay, Rahul Sharma, Rahul Shukla, Ross Taylor, Siddarth Kaul, Wayne Parnell.

KXIP

(Retained Players): Axar Patel, Anureet Singh, Beuran Hendricks, David Miller, George Bailey, Glenn Maxwell, Gurkeerat Singh Mann, Karanveer Singh, Manan Vora, Mandeep Singh, Mitchell Johnson, Parvinder Awana, Rishi Dhawan, Sandeep Sharma, Shardul Thakur, Shaun Marsh, Shivam Sharma, Thisara Perera, Virender Sehwag, Wriddhiman Saha.

KXIP (Released Players): Cheteshwar Pujara, Lakshmipathy Balaji, Murali Kartik.

KKR

(Retained Players): Gautam Gambhir, Andre Russell, Chris Lynn, Kuldeep Yadav, Manish Pandey, Suryakumar Yadav, Morne Morkel, Patrick Cummins, Piyush Chawla, Robin Uthappa, Ryan ten Doeschate, Shakib Al Hasan, Sunil Narine, Umesh Yadav, Veer Pratap Singh, Yusuf Pathan.

KKR (Released Players): Debabrata Das, Sayan Sekhar Mandal, Jacques Kallis.

MI

(Retained Players): Rohit Sharma, Aditya Tare, Ambati Rayudu, Corey Anderson, Harbhajan Singh, Jasprit Bumrah, Josh Hazlewood, Keiron Pollard, Lasith Malinga, Marchant de Lange, Pawan Suyal, Shreyas Gopal, Lendl Simmons, Unmukt Chand, R Vinay Kumar, Parthiv Patel.

MI (Released Players): Michael Hussey, Praveen Kumar, Ben Dunk, Pragyan Ojha, Jalaj Saxena, Krismar Santokie, Sushant Marathe, Apoorv Wankhade, Zaheer Khan, C.M. Gautam.

RR

(Retained Players): Shane Watson, Abhishek Nayar, Ajinkya Rahane, Ankit Nagendra Sharma, Ben Cutting, Deepak Hooda, Dhawal Kulkarni, Dishant Yagnik, James Faulkner, Kane Richardson, Karun Nair, Pravin Tambe, Rahul Tewatia, Rajat Bhatia, Sanju Samson, Steven Smith, Stuart Binny, Tim Southee, Vikramjeet Malik.

RR (Released Players): Amit Mishra, Ankush Bains, Brad Hodge.

RCB

(Retained Players): Virat Kohli, AB deVillers, Chris Gayle, Mitchell Starc, Nic Maddinson, Varun Aaron, Yuzvendra Singh Chahal, Rilee Rossouw, Vijay Zol, Yogesh Takawale, Abu Nechim Ahmed, Harshal Patel, Ashoke Dinda, Sandeep Warrier, Manvinder Bisla, Iqbal Abdullah.

RCB (Released Players): Albie Morkel, Muttiah Muralitharan, Ravi Rampaul, Sachin Rana, Shadab Jakati, Tanmay Mishra, Yuvraj Singh.

SRH

(Retained Players): Shikhar Dhawan, Ashish Reddy, Bhuvneshwar Kumar, Chama Milind, Dale Steyn, David Warner, Ishant Sharma, Karn Sharma, KL Rahul, Moises Henriques, Naman Ojha, Parveez Rasool, Ricky Bhui.

SRH (Released Players): Aaron Finch, Amit Mishra, Amit Paunikar, Brendan Taylor, Darren Sammy, Irfan Pathan, Jason Holder, Manprit Juneja, Prasanth Parameswaran, Srikkanth Anirudha, Venugopal Rao.

virender Sehwag - 2nd highest run getter for indiain 2011 worldcupYuvraj Singh - Man of the tournament in 2011world cup(...
05/12/2014

virender Sehwag - 2nd highest run getter for india
in 2011 worldcup
Yuvraj Singh - Man of the tournament in 2011
world cup(man who played with cancer to give his
country a world cup even not caring for his life)
Zaheer Khan - highest wicket takers in the world
cup
Gautam Gambhir-withoutwinning in 2011 final was
impossible
Harbhajan singh - 2nd highest wicket for india
Without these FIVE, world cup was impossible for
INDIA
Hatsoff BCCI!!

பிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்: ஒரு விரிவான பார்வைகிரிக்கெட் விளையாட்டு வரலாற்றில் நிகழ்ந்த துர்மரணம் ஒன்று உண்டென்றால் ...
27/11/2014

பிலிப் ஹியூஸ் கிரிக்கெட் பயணம்:
ஒரு விரிவான பார்வை

கிரிக்கெட் விளையாட்டு வரலாற்றில் நிகழ்ந்த துர்மரணம் ஒன்று உண்டென்றால் அது ஆஸ்திரேலிய வீரர் பிலிப் ஹியூஸின் மரணமாகவே இருக்கும். அவரது கிரிக்கெட் பயணம் மிகவும் ஆரோக்கியமாக வளர்ந்து வந்த நேரத்தில் இந்தத் துயரம் ஏற்பட்டு கிரிக்கெட் உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

அவரது கிரிக்கெட் பயணத்தின் முழு விபரம் இதோ:

இவரது முழு பெயர் பிலிப் ஜோயெல் ஹியூஸ். நவம்பர் 30, 1988-ல் அவர் நியூசவுத்வேல்ஸில் பிறந்தார். இன்னும் 3 நாட்களில் அவருக்கு பிறந்த நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

26 டெஸ்ட் போட்டிகளில் 32.65 என்ற சராசரியுடன் 1535 ரன்கள் எடுத்துள்ளார். அதிகபட்ச ஸ்கோர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக எடுத்த 160 ரன்களாகும். 3 சதங்கள் மற்றும் 7 அரைசதங்கள் எடுத்துள்ளார்.

ஒருநாள் சர்வதேச போட்டிகளில், 25 ஆட்டங்களில் 826 ரன்கள். 2 சதங்கள், 4 அரைசதங்கள். சராசரி 35.91.

18 வயதில் முதல்தர கிரிக்கெட்டில் அறிமுகம்:

தனது 18-வது வயதில் நியூசவுத்வேல்ஸ் அணிக்காக டாஸ்மேனியா அணிக்கு எதிராக புரா கோப்பை போட்டியில் முதன்முதலில் அறிமுகமானார். தொடக்க வீரராகக் களமிறங்கி 51 ரன்கள் எடுத்தார்.

இளம் வயதில் முதல் தர சதம் எடுத்து சாதனை:

பிப்ரவரி 2008-ல் புரா கோப்பை இறுதிப் போட்டியில் விக்டோரியா அணியை வெற்றி கொண்ட அந்த போட்டியில் 19-வயதில் சதம் எடுத்த வீரர் என்ற ஆஸ்திரேலிய சாதனையை நிகழ்த்தினார்.

இளம் கிரிக்கெட் வீரருகான பிராட் மேன் விருது:

பிப்ரவரி, 2009-ல் இளம் கிரிக்கெட் வீரருக்கான பிராட்மேன் விருதைப் பெற்றார் பிலிப் ஹியூஸ். அப்போதுதான் மேத்யூ ஹெய்டன் ஓய்வு அறிவிக்க, அவரது மிகப்பெரிய இடத்தை இந்த இளம் பிலிப் ஹியூஸ் இட்டு நிரப்ப ஆஸ்திரேலிய அணிக்கு அழைக்கப்பட்டார். ஜொகான்னஸ்பர்க் மைதானத்தில் டேல் ஸ்டெய்ன், மோர்னி மோர்கெல், மகாயா நிடினி ஆகியோருக்கு எதிராக தொடக்க வீரராகக் களமிறங்கினார். ஆனால் முதல் இன்னிங்ஸில் 4-வது பந்தில் டேல் ஸ்டெய்ன் பந்தில் பவுச்சர் கேட்ச் பிடிக்க வெளியேறினார்.

2-வது இன்னிங்சில் 121 பந்துகளில் 11 பவுண்டரி 1 சிக்சருடன் 75 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலியா 207 ரன்களில் மடிந்தது. ஆனால் பிலிப் ஹியூஸ் 75 ரன்கள். அனைத்து ஷாட் பிட்ச் பந்துகளையும் பாயிண்ட், ஸ்லிப் திசையில் தூக்கி அடித்தார் அவர். ஆஸ்திரேலியா அந்தப் போட்டியில் வென்றது. பிலிப் ஹியூஸ் 2-வது இன்னிங்ஸில் 3 கேட்ச்களையும் பிடித்தார்.

2-வது டெஸ்ட் போட்டியில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து சாதனை:

அதே தென் ஆப்பிரிக்க தொடரில் 2-வது டெஸ்ட் போட்டி டர்பனில் நடைபெற்றது. இரு இன்னிங்ஸ்களிலும் சதம் கண்டார் பிலிப் ஹியூஸ், அதாவது 115 மற்றும் 160 ரன்கள். 20 வயதில் இரு இன்னிங்ஸ்களிலும் சதம் எடுத்து புதிய சாதனை படைத்தார். இது மார்ச் 2009-ல் நடைபெற்றது.

ஆஷஸ் தொடரிலிருந்து நீக்கம்:

2009 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஷாட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்வதில் பெரும் பிரச்சினைகளைச் சந்தித்ததால் ஆஷஸ் தொடரில் 2 டெஸ்ட் போட்டிகளுக்குப் பிறகு டெஸ்ட் அணியிலிருந்து நீக்கப்பட்டார். ஷேன் வாட்சன் அப்பொது இவருக்குப் பதிலாக சைமன் கேடிச்சுடன் தொடக்க வீரராகக் களமிறக்கப்பட்டார்.

மீண்டும் 2010-ல் டெஸ்ட் வாசம்:

ஜனவரி மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரில் ஆட அழைக்கப்பட்டார். காரணம் அப்போது கேடிச் காயமடைந்தார். பிறகு வாட்சன் காயமடைய வெலிங்டனில் நியூசிலாந்துக்கு எதிராக 2-வது இன்னிங்ஸில் வெற்றி பெற 106 ரன்கள் தேவை என்ற நிலையில், 75 பந்துகளில் 12 பவுண்டரி ஒரு சிக்சருடன் 86 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார்.

டிசம்பர் 2010:

சைமன் கேடிச்சிற்கு காயம் ஏற்பட மீண்டும் ஆஷஸ் தொடரில் கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்கு அழைக்கப்பட்டார். ஆனால் மீண்டும் ஷாட் பிட்ச் துர்கனவு அவரைத் துரத்தியது சரியாக ஆட முடியவில்லை.

சர்ச்சைக்குரிய முறையில் மீண்டும் 2011-ல் ஆஸ்திரேலிய அணியில்:

சைமன் கேடிச் கிரிக்கெட் வாழ்வை கிரெக் சாப்பல் முடித்து வைக்க பிலிப் ஹியூஸ் தனது டெஸ்ட் இடத்தைத் தக்க வைத்தார். இது அப்போது சர்ச்சையானது. ஆனால் அந்தத் தொடரில் இலங்கைக்கு எதிராக 3-வது டெஸ்ட் போட்டியில், கொழும்புவில் 126 ரன்கள் எடுத்து தனது 3-வது டெஸ்ட் சதத்தை 2 ஆண்டுகள் கழித்து எடுத்தார் பிலிப் ஹியூஸ்.

2011-ஆம் ஆண்டு இவரது பலவீனத்தை வெளிக்கொணர்ந்த நியூசி. பவுலர் கிறிஸ் மார்டின்:

நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் 4 இன்னிங்ஸ்களிலும் வேகப்பந்து வீச்சாளர் கிறிஸ் மார்ட்டினின் வெளியே செல்லும் பந்துகளை தொட்டு ஆட்டமிழந்தார். இதனைத் தொடர்ந்து இந்தியாவுக்கு எதிரான தொடரிலிருந்து நீக்கப்பட்டார்.

மீண்டும் டிசம்பர் 2012:

டிசம்பர் 2012-ஆம் ஆண்டு இலங்கைக்கு எதிரான ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற தொடரில் ஆடி, இரண்டு அரைசதங்களை எடுத்தார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகப் போட்டியில் சதம் எடுத்த ஆஸி. வீரர் என்ற சாதனை:

நீண்ட கால கனவிற்குப் பிறகு ஆஸ்திரேலிய ஒருநாள் கிரிக்கெட் அணியில் அவர் தேர்வு செய்யப்பட்டு ஆடவைக்கப்பட்டார். மெல்பர்னில் இவர் இலங்கைக்கு எதிராக அறிமுக ஒருநாள் போட்டியில் சதம் எடுத்து புதிய ஆஸ்திரேலிய சாதனை படைத்தார். பிறகு ஹோபார்ட்டிலும் இலங்கைக்கு எதிராக 138 ரன்கள் எடுத்தார்.

அனைத்து வடிவங்களிலும் சிறந்து விளங்கியதற்காக விருது:

பிப்ரவரி 2013-ல் ஆஸ்திரேலியாவின் சிறந்த உள்நாட்டு வீரர் என்ற விருதைப் பெற்றார். அந்த ஆண்டு அனைத்து வடிவங்களிலும் சேர்த்து 1108 ரன்களை எடுத்தார் பிலிப் ஹியூஸ்.

தொடக்க வீரர் நிலையிலிருந்து 6-ஆம் இடத்திற்கு இறக்கம்:

2013-ஆம் ஆண்டு ஆஷஸ் தொடரில் அவர் 6ஆம் நிலையில் களமிறங்கி முதல் டெஸ்ட் போட்டியில் 81 ரன்கள் எடுத்தார். ஆனால் அடுத்த லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஒரு ரன்னை எடுத்ததால் மீண்டும் அணியிலிருந்து நீக்கப்பட்டார்.

லிஸ்ட் ஏ ஒருநாள் கிரிக்கெட்டில் இரட்டை சதம் கண்ட முதல் ஆஸி. வீரர்:

ஆஸ்திரேலியா ஏ அணிக்காக ஜூலை 2014-ல் தென் ஆப்பிரிக்கா ஏ அணிக்கு எதிராக டார்வின் மைதானத்தில் ஒருநாள் கிரிக்கெட்டில் 202 ரன்கள் அடித்து இரட்டை அடித்த முதல் ஆஸி.வீரரானார்.

கடைசியாக அக்டோபர் 12, 2014-ல் பாகிஸ்தானுக்கு எதிராக கடைசியாக ஒருநாள் போட்டி ஒன்றில் ஆஸ்திரேலியாவுக்காக ஆடினார்.

நவம்பர் 16. இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்கமுடியுமா என்ன? 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி ...
16/11/2014

நவம்பர் 16. இந்த நாளை இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அவ்வளவு எளிதாக மறக்கமுடியுமா என்ன? 1989-ம் ஆண்டு நவம்பர் 15-ம் தேதி பாகிஸ்தானுக்கு எதிராக பாலகனாகக் களமிறங்கி சர்வதேச கிரிக்கெட்டுக்குள் நுழைந்த சச்சின், தனது சொந்த மண்ணான மும்பையில் கடந்த ஆண்டு நவம்பர் 16-ம் தேதி நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியோடு தனது கால் நூற்றாண்டு கால கிரிக்கெட் வாழ்க்கையை முடித்துக் கொண்டார். சச்சின் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்று ஓராண்டு ஓடிவிட்டாலும், அவருடைய அலை மட்டும் இன்னும் ஓய்ந்தபாடில்லை.

சென்ற வருடம் இன்றைய நாளில்தான் (நவம்பர் 16) மும்பையில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகளை வீழ்த்தி மூன்றே நாட்களில் போட்டியை முடிவுக்கு கொண்டு வந்தது இந்தியா. அதோடு சச்சினின் வியப்பான சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவடைந்தது.

சச்சினின் கடைசி டெஸ்ட் போட்டியைக் காண அவருடைய தாய், குடும்பத்தினர் மற்றும் பயிற்சியாளர் ராம்காந்த் அச்ரேக்கர் ஆகியோர் மைதானத்துக்கு வந்திருந்தார்கள். அந்தப் போட்டியில் டாஸ் போடுவதற்கு விசேஷ நாணயம் பயன்படுத்தப்பட்டது. அந்த நாணயத்தின் ஒரு பக்கத்தில் மஹாராஷ்டிர கிரிக்கெட் சங்கத்தின் இலச்சினையும், மறுபக்கத்தில் சச்சினின் உருவப்படமும் பொறிக்கப்பட்டிருந்தன. டாஸ் போட்டபிறகு அந்த நாணயம் சச்சினிடமே வழங்கப்பட்டது.

வெற்றிகளோடு விடை பெற்ற சச்சின்

உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்புக்கு உள்ளாகியிருந்த அந்த டெஸ்ட் போட்டி மூன்றே நாள்களில் முடிந்துபோனதால் போட்டியின் 4 மற்றும் 5-வது நாட்களில் சச்சினுக்காக திட்டமிடப்பட்டிருந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் அடியோடு ரத்தாகின. இந்த டெஸ்டில் 74 ரன்கள் எடுத்த சச்சினின் விக்கெட்டை கடைசியாக எடுத்தவர், ஆஃப் ஸ்பின்னர் நர்சிங் டியோநரேன். சச்சின் தனது கடைசி டெஸ்ட் (2013), கடைசி ஒருநாள் போட்டி (2012), ஒரேயொரு சர்வதேச டி20 (2006), கடைசி ஐபிஎல் (2013), கடைசி சாம்பியன்ஸ் லீக் (2013), கடைசி ரஞ்சிப் போட்டி (2013) என அனைத்திலும் வெற்றியோடே விடை பெற்றிருக்கிறார்.

மூச்சிருக்கும் வரை…

கடந்த ஆண்டு இதே நாளில் இந்திய அணி வெற்றி பெற்று, பரிசளிப்பு விழா சம்பிரதாயங்கள் முடிந்த பிறகு பலத்த கரகோஷத்துக்கு இடையே பேச வந்தார் சச்சின். தன்னுடைய இறுதியுரையில், முதலில் பெற்றோர், குடும்ப உறுப்பினர்கள், நண்பர்களுக்கு நன்றி சொன்னார். பிறகு தன் குருவுக்கு நன்றி சொல்லி மரியாதை செலுத்தினார். ‘சச்சின்... சச்சின்... என்ற உங்களின் முழக்கம் எனது கடைசி மூச்சு இருக்கும் வரை எனது செவிகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும்.’ என்று சொல்லி தன் பேச்சை முடித்துக் கொண்டபோது பல கோடி கிரிக்கெட் ரசிகர்களின் கண்களில் கண்ணீர் வடிந்துகொண்டிருந்தது.

பிறகு ஆடுகளத்தைத் தொட்டு வணங்கினார். வழக்கமாக போட்டி முடிந்தவுடன் வீட்டுக்குக் கிளம்பிப் போகும் ரசிகர்கள், அன்று மட்டும் பரிசளிப்பு விழா முடிந்தபிறகும் நகராமல் இருந்தார்கள். இனிமேல் சச்சினை ஒரு இந்திய கிரிக்கெட் வீரராக மைதானத்தில் பார்க்கமுடியாது என்பதால் அவர் மைதானத்தில் இருந்த ஒவ்வொரு மணித்துளியையும் கண்கொட்டாமல் ரசித்தார்கள். ‘சச்சினின் கடைசி கிரிக்கெட் தினத்தை நான் நேரில் பார்த்தேன்’ என்கிற பெருமையும் சோகமும் அவர்களிடம் இரண்டறக் கலந்துவிட்டதைக் காணமுடிந்தது.

சச்சினை புகழ்ந்த நியூயார்க் டைம்ஸ்

சச்சினின் ஓய்வு பற்றி குறிப்பிட்ட நியூயார்க் டைம்ஸ், ‘கிரிக்கெட்டில் இருந்து சச்சின் ஓய்வு பெறுவது, மகாத்மா காந்தி இறந்த சம்பவத்துக்குச் சமம்’ என்று எழுதியது. ஆட்டம் முடிந்தபிறகு பேசிய தோனி, ‘சிறந்த முன்மாதிரியாக இருந்ததற்கு சச்சினுக்கு மிக்க நன்றி. அவர் வாழ்ந்த விதத்தைப் பார்க்கும்போது அதிலிருந்து நாங்கள் நிறைய கற்றுக்கொள்ளமுடியும்’ என்று பேசினார். சச்சின் ஓய்வு பெற்ற சிலமணி நேரங்களில், அவருக்கு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவித்தது மத்திய அரசு.

அதன்பிறகு சச்சின் சர்வதேச கிரிக்கெட் ஆடாவிட்டாலும், அவரைப் பற்றிய செய்திகள் மட்டும் இன்று வரை வந்து கொண்டேயிருக்கின்றன. இந்த ஆண்டு நிறைய நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். லார்ட்ஸ் மைதானத்தின் 200-வது ஆண்டு விழாவை முன்னிட்டு, அங்கு ஜூலை 5-ம் தேதி நடந்த கண்காட்சி கிரிக்கெட் போட்டியில் வார்னே அணிக்கு எதிராக 44 ரன்கள் எடுத்தார் சச்சின். இந்தப் போட்டியிலும் சச்சின் தலைமை தாங்கிய மெரில்போன் கிரிக்கெட் கிளப் (எம்.சி.சி.) அணியே வெற்றி பெற்றது. பேட்டிங்கின்போது வார்னேவுக்குக் காயம் உண்டானதால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சச்சின், வார்னே இடையிலான ஆரோக்கியமான, ஆக்ரோஷமான போட்டியைக் காணமுடியாமல் போனது.

கிராமத்தை தத்தெடுத்த சச்சின்

மறைந்த டான் பிராட்மேன் அறக்கட்டளை சார்பாக கவுரவிக்கப்பட்டார் சச்சின். ‘தூய்மை இந்தியா' என்ற விழிப்புணர்வு பிரசாரத்தில் பங்கேற்குமாறு பிரதமர் நரேந்திர மோடி விடுத்த அழைப்பை ஏற்றுக்கொண்டார். எம்.பி.யின் கடமையாக, ஆந்திர மாநிலம் நெல்லூர் மாவட்டத்தில் உள்ள புட்டம்ராஜு கிராமத்தை தத்தெடுத்தார். சச்சின், மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டதில் இருந்து 3 நாள்கள் மட்டுமே அவைக்கு வந்திருக்கிறார் என்றொரு சர்ச்சை ஏற்பட்டது. அதற்கு, தனது மூத்த சகோதரர் இதய அறுவை சிகிச்சை மேற்கொள்ளவிருந்த காரணத்தால் தன்னால் நாடாளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொள்ள முடியவில்லை என மாநிலங்களவை துணைத் தலைவர் குரியனுக்கு விடுப்புக் கடிதம் அனுப்பி அதற்கான ஒப்புதலைப் பெற்றார்.

சச்சினை வியக்கவைத்த ரஜினி

விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின்போது சச்சின் டெண்டுல்கரைத் தனக்குத் தெரியாது என்று சொன்ன பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவாவை யார் இந்த மரியா ஷரபோவா என்று கேட்டு சமூக வலைத்தளங்களில் சச்சின் ரசிகர்கள் கொந்தளித்தார்கள். இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து போட்டியில் கேரளா அணியை (பிவிபி நிறுவனத்துடன் இணைந்து) வாங்கினார் சச்சின். ஹாக்கி உலகக்கோப்பைக்குத் தயாராகிக்கொண்டிருந்த இந்திய அணி வீரர்களை நேரில் சந்தித்து ஊக்கப்படுத்தினார். ஃபார்முலா 1 கார் பந்தயத்தை நேரில் பார்த்து ரசிக்க பஹ்ரைன் சென்றார். டிசம்பர் 2013-ல், என்.டி.டி.வி விருது வழங்கும் விழாவில் ரஜினியை சந்தித்துப் பேசி, “ரஜினியின் பணிவும் தன்னடக்கமும் என்னை வியக்க வைத்தது.” என்று பேட்டி கொடுத்தார்.

ஓய்வு பெற்ற அடுத்த ஒருவருடத்துக்குள் சச்சினின் சுயசரிதை வெளிவந்துவிட்டது. அதன் விற்பனை, சச்சினைப் போலவே சாதனையும், சகாப்தமும் படைத்துக்கொண்டிருக்கிறது. இப்போது அவருடைய எல்லா கிரிக்கெட் கடமைகளும் முடிந்துவிட்டனவா என்கிற கேள்வி எழுகிறது.
சச்சினையும் கிரிக்கெட்டையும் அவ்வளவு எளிதாக பிரிக்கமுடியாது. அவர், ஒரு பேட்ஸ்மேனாக தன் கடமைகளை முடித்துவிட்டாலும், வேறு ரூபத்தில் விரைவில் வெளிப்படுவார். அந்த தருணத்துக்காக காத்திருப்போம்!

INDIA VS SRILANKA (2nd ODI)Man Of The MatchAmbati Rayudu 121 Runs118 Balls10 Fours04 Sixes
06/11/2014

INDIA VS SRILANKA (2nd ODI)

Man Of The Match

Ambati Rayudu
121 Runs
118 Balls
10 Fours
04 Sixes

Rohit 209 off 158 balls (12x4 | 16x6)On this day last year, records were broken as ourHitman entered the history books b...
02/11/2014

Rohit 209 off 158 balls (12x4 | 16x6)

On this day last year, records were broken as our
Hitman entered the history books by smashing a
magnificent double century against Australia in
Bangalore!

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு இன்று பிறந்தநாள். அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து... # அப்பா ரவிச்...
18/09/2014

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் ரவிச்சந்திரனுக்கு இன்று பிறந்தநாள்.
அவரைப் பற்றி அரிய முத்துக்கள் பத்து...

# அப்பா ரவிச்சந்திரன் கிளப் கிரிக்கெட் ஆடியவர். அம்மா சித்ரா. மனைவி ப்ரீத்தி.

# தகவல் தொழில்நுட்பப் பிரிவில் பி.டெக். பட்டம் பெற்றுள்ளார் அஸ்வின் ரவிச்சந்திரன்.

# இந்திய அணி மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இவரது டி-சர்ட் எண் 99.
டிவிட்டர் கணக்கு ஐ.டி ashwinravi99.

# பள்ளிக் காலங்களில் தொடக்க ஆட்டக்காரராக இருந்தார். பிறகு தன்னை சுழல் பந்து வீச்சாளராக மாற்றிக்கொண்டார்.

# சென்னையில் ஐ.பி.எல். போட்டிகள் நடக்கும்போது நேரம் கிடைத்தால், தெருவில் ‘கல்லி’ கிரிக்கெட் ஆடுவார்.

# அவரது பலம்.. பல்திறனான பந்துவீச்சுகள். இலங்கையின் அஜந்தா மெண்டிஸிடம் இருந்து கேரம் பால் பந்துவீச்சைக் கற்றுக்கொண்டார்.

# இந்திய கிரிக்கெட் அணியில் முதல் போட்டிக்குத் தேர்வானதும் சச்சின் கையால் அவருக்குத் தொப்பி தரப்பட்டது.

# விதவிதமான ஹேர் ஸ்டைல்கள் வைத்துக்கொள்வது, டென்னிஸ் ஆடுவது, காரில் தனியாக நீண்ட பயணம் போவது பிடிக்கும்.

# 2011-ம் ஆண்டு மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் சதத்தை அடித்தார்.

# அறிமுகமான டெஸ்ட் தொடரில் இரண்டு முறை ஆட்ட நாயகன் விருதுகள், அதிவேக ஐம்பது டெஸ்ட் விக்கெட்கள், நம்பர் ஒன் ஆல் ரவுண்டர் என்று பல சாதனைகள் கைவசம் வைத்துள்ளார்

Happy Independence Day
14/08/2014

Happy Independence Day

Address


Website

Alerts

Be the first to know and let us send you an email when World Tamil 360 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

  • Want your business to be the top-listed Event/venue?

Share